ரிலையன்ஸ் பவுண்டேசனுக்கு ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் புரஸ்கார் விருது
ரிலையன்ஸ் பவுண்டேசனுக்கு ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் புரஸ்கர் விருது வழங்கப்பட்டது.
டெல்லி: ரிலையன்ஸ் பவுண்டேசனுக்கு ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் புரஸ்கார் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கான கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் இன்று டெல்லியில் வழங்கப்பட்டன. நாட்டின் விளையாட்டு தினமான இன்று இந்த விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பாராம்பிலிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன் உள்ளிட்ட 16 வீரர்களுக்கு அர்ஜூனா விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். ஹாக்கி வீரர் சர்தார் சிங், பாராலிம்பிக் வீரர் தேவேந்திரி ஜஹாரியா ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
மேலும் இளையோர் விளையாட்டை ஊக்கப்படுத்தியதற்காக ரிலையன்ஸ் பவுண்டேசனுக்கு ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ரிலையன்ஸ் பவுண்டேசன் தலைவர் நீடா அம்பானி பெற்றுக் கொண்டார்.