நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலா பயணம்- நேரில் சந்திக்க முடியவில்லை- ஹைகோர்ட்டில் கர்நாடகா போலீஸ்
பெங்களூரு: சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளதாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
நித்தியானந்தா மீது கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றத்தில் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள நித்தியானந்தா 50 முறை வாய்தாக்கள் வாங்கி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதி குன்ஹா விசாரித்து வருகிறார்.
இவ்வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின் போது, நித்தியானந்தாவுக்கு 50 முறை வாய்தாக்கள் கொடுத்தது குறித்து நீதிபதி குன்ஹா அதிருப்தி வெளியிட்டார். மேலும் நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை ஆஜராக உத்தரவிடக் கோரும் சம்மனை நேரில் வழங்க வேண்டும் என்றும் இது தொடர்பான அறிக்கையை திங்களன்று தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கர்நாடகா போலீசாருக்கு நீதிபதி குன்ஹா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனுவைத் தாக்கல் செய்த கர்நாடகா போலீசார், பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா இல்லை. நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். அதனால் அவரது இருப்பிடம் குறித்து தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.
அப்போது கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், ஜாமீன் நிபந்தனைகள் எதனையும் நித்தியானந்தா மீறவில்லை என்றும் குறிப்பிட்டார். நித்தியானந்தா போலி பாஸ்போர்ட் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்து தெரிவிக்க சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலா சென்றிருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கில் வரும் 5-ந் தேதி தீர்ப்பளிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications