Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டுமானத்தில் உள்ள 29 சுரங்கங்களின் நிலை என்ன? நிதின் கட்கரி சொன்ன வார்த்தை! பிறந்த நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அனைவரும் மீட்கப்பட்டிருப்பது மகிழச்சியளிப்பதாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்தனர். மொத்தம் 4.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் வெளி வர முடியாதபடி 150 மீ நீளத்திற்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

Nitin Gadkari announced that the mining operations being carried out across the country will be audited

கடந்த 18 நாட்களாக இவர்களை மீட்க தொடர் முயற்சிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டிருந்தனர். தொடர் முயற்சி காரணமாக அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் உணவு பொருட்களை விநியோகிக்க முடிந்திருக்கிறது. இது உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருந்தது. ஆனாலும், அவர்கள் உள்ளே சிக்கி 18 நாட்கள் ஆகிவிட்டதால் தீவிர மனசோர்வுக்கு ஆட்பட்டிருந்தார்கள். எனவே மீட்பு பணியை துரிதப்படுத்தி அவர்களை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்தது.

ஆனால் இதில் சில சிக்கல்கள் இருந்தன. அதாவது, சுரங்கத்தின் வாயிற் பகுதியில் நுழைந்து தொழிலாளர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மைதான். மற்ற மலை பகுதியில் இருக்கும் பாறைகளை போல உத்தரகாண்ட் மற்றும் இயமலையை ஒட்டியுள்ள மலையின் பாறைகள் கடினமானவை கிடையாது. இந்த பாறைகளை கையில் எடுத்தாலே உதிரியாய் பெயர்ந்து வரும் அளவுக்கு மென்மையாக இருக்கிறது.

எனவே நுழைவு வாயில் வழியாக உள்ள இடிபாடுகளை அகற்றும்போது மேலும் மண், பாறை சரிவுகள் ஏற்பட்டது. இதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தோண்ட தொடங்கினால் சுரங்கம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மீட்பு படையினர், சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்து துளை போட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க போராடினர். இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. தற்போது 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதாவது, "சில்க்யாரா சுரங்கத்திலிருந்து 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பிரதமர் தலைமையிலான அனைத்து ஏஜென்சிகளும் இரவும் பகலும் பாடுபட்டு இதை சாதித்திருக்கின்றன. மீட்பு நடவடிக்கையில் உதவிய தொழிலாளர்களுக்கும் நன்றி. தற்போது கட்டுமானங்களில் உள்ள அனைத்து சுரங்கங்களிலும் தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 29 சுரங்க பாதைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தணிக்கை செய்யும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் இனி உத்தரகாண்ட் சுரங்க விபத்தை போல வேறு எங்கும் ஏற்படாது என்கிற நம்பிக்கையை பிறக்க செய்திருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+