பீகார்: பாஜக கூட்டணி முறிவு- நிதிஷ்குமார் அறிவிப்பு! ஆர்ஜேடி, காங். உடன் ஜேடியூ இணைந்து புதிய அரசு?
பாட்னா: பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் தமது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஜேடியூ புதிய ஆட்சி அமைக்க உள்ளது. புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் இன்று மாலை 4 மணிக்கு நிதிஷ்குமார் சந்திக்க உள்ளார்.
Recommended Video
பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் தொடக்கம் முதலே பாஜக மீது முதல்வர் நிதிஷ்குமார் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். மத்திய அமைச்சரவையில் 2 இடங்கள் கேட்டும் கொடுக்க பாஜக மறுத்தது; ஜேடியூ கட்சிக்குள்ளேயே ஆர்பிசிங் உள்ளிட்டோரை நிதிஷ்குமாருக்கு எதிராக கொம்பு சீவிவிடுவது உள்ளிட்ட பல காரணங்களால் பாஜக மீது அதிருப்தியை காட்டி வந்தார் முதல்வர் நிதிஷ்குமார்.

மேலும் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் பொதுவான பிரதமர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்தவும் நிதிஷ்குமார் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வது என முடிவு செய்தார் நிதிஷ்குமார்.
இதனைத் தொடர்ந்து பாட்னாவில் ஜேடியூ எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நிதிஷ்குமார் அறிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக் கொண்ட நிலையில், லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் ஜேடியூ இணைந்து புதிய ஆட்சியை அமைக்க இருக்கிறது. ஏற்கனவே ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள், நிதிஷ்குமாருக்கு ஆதரவும் தெரிவித்துள்ளன.
பீகார் சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் பலம்:
பீகார் மொத்த இடங்கள்: 243
தற்போது:
பாஜக- 77
நிதிஷ்குமாரின் ஜேடியூ- 45
ஹெச்.ஏ.எம்- 4
சுயேட்சை- 1
லாலுவின் ஆர்ஜேடி- 80
காங். 19
இடதுசாரிகள்- 16
மஜ்லிஸ் கட்சி- 1
பாஜகவை கழற்றிவிட்ட நிலையில் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள், ஜேடியூ இணைந்து ஆட்சி அமைத்தால் மொத்தம் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. பீகார் சட்டசபையில் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 122 என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 16 பாஜக அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாஜக இதனை திட்டவட்டமாக மறுத்தது. கூட்டணி தொடர்பாக நிதிஷ்குமார் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் பாஜக தலைவர்கள்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications