நிதீஷ் போவது கஷ்டம்தான்.. ஆனா போனது போனதுதான்.. சொல்கிறார் சரத் யாதவ்
பாட்னா: நிதீஷ் குமார் ராஜினாமா என்பது கடினமான முடிவுதான். அதேசமயம், அதுவே இறுதியானது என்று கூறியுள்ளார் ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ்.
இதன் மூலம் ஐக்கிய ஜனதாதளத்தில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. நிதீஷ் ராஜினாமாவை ஏற்க மாட்டோம், அவரே நீடிக்க வேண்டும் என்று பீகார் மாநில ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் முடிவெடுத்துள்ள நிலையில் அதை மறு பரிசீலனை செய்வதாக நிதீஷ் குமாரும் சொல்லியுள்ள நிலையில் போனது போனதுதான் என்று சரத் யாதவ் சொலலியிருப்பதால் கட்சி பிளவுபடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து சரத் யாதவ் கூறுகையில், நாட்டிந் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை நிதீஷ் எடுத்துள்ளார். கட்சி நலனைக் கருத்தில் கொண்டுதான் இது எடுக்கப்பட்டது. மேலும் நிதீஷ் குமாரின் நலனையும் கருத்தில் கொண்டதுதான் இந்த முடிவு. இது கடினமான முடிவுதான், ஆனால் சரியானது, இறுதியானது என்றார் யாதவ்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நிதீஷ் குமாரின் முடிவு கட்சி எம்.எல்.ஏக்களுக்கு விலக்கிச் சொல்லப்பட்டு விட்டது. நமது இலக்கு டெல்லிதான், பீகார் அல்ல என்றார் அவர்.
கட்சி எம்.எல்.ஏக்கள் நிதீஷுக்கு ஆதரவாகப் பேசி வரும் நிலையில், யாதவ் இப்படிப் பேசியிருப்பது குழப்பத்தை அதிகரிப்பது போல உள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications