''மோடியை இந்தியன் முஜாஹிதீன் கொல்ல வேண்டும் என்று விரும்பினார் நிதீஷ்...''

Subscribe to Oneindia Tamil

Nitish Kumar wanted IM to eliminate Narendra Modi: BJP leader
அகமதாபாத்: நரேந்திர மோடியை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தீர்த்துக் கட்ட வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் விரும்பினார் என்று பீகாரைச் சேர்ந்த பாஜக தலைவர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிங் கூறுகையில், நரேந்திர மோடியை தீர்த்துக் கட்டும் சதியில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் தொடர்பு உள்ளது. இதனால்தான் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை அவர் சுதந்திரமாக நடமாட விட்டார்.

மோடியைக் கொல்ல இந்தியன் முஜாஹிதீன் முயல்வதறகு அவர் ஆதரவாக இருந்தார். அவர்கள் மோடியைக் கொல்ல வேண்டும் என்று விரும்பியவர் நிதீஷ். இந்தப் புகாரை நான் பகிரங்கமாகவே சொல்கிறேன் என்றார் சிங்.

அவரது இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் புகாரை பீகார் உணவுத்துறை அமைச்சர் ஷியாம் ரஜக் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், இது அடிப்படை ஆதாரம் இல்லாத அற்பத்தனமான புகார். பொறுப்பற்ற முறையில் கிரிராஜ் சிங் பேசியுள்ளார். இதுகுறித்து பாஜக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+