2019 மக்களவை தேர்தலில் நிதிஷ்குமார் தான் பிரதமர் வேட்பாளர்.. சொல்கிறார் லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அதிரடியாக கருத்து கூறியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது.

இந்நிலையில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவிக்குமா? என்று செய்தியாளர்கள் லாலு பிரசாத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த அவர் "ஆமாம் நிச்சயமாக. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து பீகாரில் மெகா கூட்டணி அமைத்து கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது. இதனிடையே, நிதிஷ்குமார் தலைமையிலான மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து 2019-ல் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் திட்டமிடப்பட்டு வரும் மூன்றாவது கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் பேசப்பட்டு வருகிறார். இதை லாலு தனது பதிலில் இன்று அங்கீகரித்துள்ளார்.
இதன்மூலம், பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து லாலு விலகி விட்டார் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு தான் பிரதமர் பதவிக்கும் தகுதியானவர் எனக் கூறி வந்தது நினைவு கூறத்தக்கது.
2019 தேர்தலில் மோடிக்கு எதிராக ராகுல்காந்தி மட்டுமே முக்கிய பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கருதப்பட்டது. நிதிஷ்குமார் தற்போது களத்தில் இறங்கியுள்ளதால் அது ராகுல்காந்திக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications