நிதிஷ்குமாரும் லாலுவும் ஈகோவால் மோத பீகாருக்கு மீண்டும் தேர்தல் வரும்... ராம்விலாஸ் பாஸ்வான் ஆரூடம்
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவும் ஈகோவால் மோதிக் கொள்ள பீகாருக்கு மீண்டும் தேர்தல் வரும் என்று லோக் ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத்தின் இளைய மகன் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே பாட்னாவில் செய்தியாளர்களிடம் ராம்விலாஸ் பாஸ்வான் நேற்று கூறியதாவது:
பா.ஜ.க. தலைமையிலான எங்கள் தேசிய ஜனநாயககக் கூட்டணிக்கு எதிரான மகா கூட்டணி தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த கூட்டணி அரசு முழு ஆட்சிக் காலத்துக்கும் நீடிக்காது.
இந்த கூட்டணி அரசின் உள்ள தலைவர்களிடையேயான ஈகோவால் பீகார் சட்டசபை இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும். இதுதான் நடக்கப் போகிறது.
இவ்வாறு பாஸ்வான் கூறினார்.












Click it and Unblock the Notifications