இன்று கர்நாடக பந்த்.. பஸ், ஆட்டோ, டாக்சி ஓடாது.. ஸ்தம்பிக்கப் போகும் பெங்களூர்! #KarnatakaBandh
பெங்களூர்: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரு, இவ்வாண்டில் 4வது பொது வேலை நிறுத்த போராட்டத்தை இன்று சந்திக்க உள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் ஆட்டோ, டாக்சிகள் முற்றிலுமாக ஓடாது என தகவல் வெளியாகியுள்ளதால், பணியாளர்களும், நிறுவனங்களும், பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் கையை பிசைகின்றன.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து, கன்னட சங்கங்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெற உள்ளது.
கர்நாடகாவில், இவ்வாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்படும் 4வது பந்த் இதுவாகும். இதனால் பெங்களூர் நகரம் ஸ்தம்பிக்க வாய்ப்புள்ளது.

1100 சங்கங்கள் ஆதரவு
கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், பந்த்துக்கு, 1100 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், மால்களை மூடிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

60 ஆயிரம் டாக்சிகள்
பெங்களூர் டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா கூறுகையில், சுமார் 60 ஆயிரம் டாக்சிகள் நாளைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாகவும், தனியார் நிறுவனங்களிடம் இதுகுறித்து முன்கூட்டியே தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.

ஓலா, உபேர் சொல்வது
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நகருக்கு பயணிகள் வர முடியாத அளவுக்கு அங்கிருந்தும் டாக்சிகள் இயங்காது என தெரிகிறது. இதனால் விமான பயணிகள் நிலை பரிதாபமாக உள்ளது. அதேநேரம், ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள், வழக்கம்போல தாங்கள் வாகனங்களை இயக்குவோம் என்று கூறியுள்ளனர்.

திரையுலகமும் பங்கேற்பு
ராஜ்குமார் ரசிகர் சங்க தலைவர் சா.ரா.கோவிந்து கூறுகையி்ல், நாளை எந்த ஒரு கன்னட படமும் ரிலீசாகாது, பட சூட்டிங் பணிகளும் நடைபெறாது என்று தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரிகள்
வாகனங்கள் இயக்கப்படாது என்பதால் பெங்களூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அனேகமாக விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் அது இரவில்தான் உறுதியாக தெரிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications