ரயில் பராமரிப்பு குறித்து சிஏஜி அறிக்கை எதிரொலி.... ஏசி ரயில்களில் போர்வை வழங்குவது நிறுத்தம்-?
ரயில்கள் பராமரிப்பு குறித்து சிஏஜி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து சில ரயில்களின் ஏசி கோச்சுகளில் வழங்கப்படும் போர்வையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
டெல்லி: மத்திய கணக்கு மற்றும் தணிக்கை குழுவின் அறிக்கையின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ரயில்களில் ஏசி கோச்சுகளில் வழங்கப்படும் போர்வையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கணக்கு மற்றும் தணிக்கை குழு எனப்படும் சிஏஜி சமீபத்தில் ரயில்வே தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ரயில்கள் சுத்தமாக இல்லை என்றும், சுகாதாரம் சரியாக பேணப்படுவதில்லை என்றும் சிஏஜி குறிப்பிட்டிருந்தது.
மேலும் இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகத்துக்கு கண்டனமும் தெரிவித்திருந்தது. இதையடுத்து குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்குவதை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே அதிகாரி தகவல்
இது குறித்து ரயில்வே துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட சில ரயில்களில் சோதனை முயற்சியாக பயணிகள் குளிரில் நடுங்காமல் இருக்க வெப்பநிலை 19 டிகிரி செல்சியசிலிருந்து, 24 டிகிரி செல்சியசாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுத்தப்படுத்த ஆகும் செலவு
பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகளை சுத்தப்படுத்த ரூ.55 செலவாகிறது. ஆனால் பயணிகளிடம் இதற்காக ரூ.22 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது ரயில்வே துறைக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது.

சமாளிக்க யோசனை
இந்த கூடுதல் செலவை குறைக்க ஏசி பெட்டிகளில் வெப்பநிலையின் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். ரயில்வே விதிகளின்படி, 2 மாதங்களுக்கு ஒரு முறை பெட்ஷீட்கள், போர்வைகள் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் இது முறையாக பின்பற்றப்படாததால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஒரு முறை பயன்படுத்தக் கூடிய...
பொதுமக்களின் புகார்களை தவிர்க்க தவிர்க்க கடந்த ஆண்டு ஐஆர்சிடிசி ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் படி டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பெட்ஷீட் மற்றும் போர்வையை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பதிவு செய்து, ரயில் நிலைய கவுன்ட்டர்களில் பெற்று கொள்ளலாம். இதன்படி 2 பெட்ஷீட்டுகள் ஒரு தலையணைக்கு ரூ.140-ம், போர்வைக்கு மட்டும் ரூ.110-ம் செலுத்த வேண்டும். எனினும் இவை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications