டீ விற்ற மோடியை விட பெரிய ‘ஆம் ஆத்மி’... சான்ஸே இல்லை: ராஜ்நாத் சிங்
வாரணாசி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விட பெரிய ஆம் ஆத்மி என யாரும் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்.
16வது லோக்சபா தேர்தலின் கடைசி மற்றும் 9வது கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அதனையொட்டி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ராஜ்நாத் சிங். அப்போது அவர் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பிறக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ஆம் ஆத்மி கட்சிக் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், ''ஆம் ஆத்மி என்று ஒரு கட்சி இருக்கிறதா? அது எந்த கட்சி என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே ஆம் ஆத்மிதான் (பாமர மனிதன்). ரயில்வே பிளாட் பாரங்களில் டீ விற்று வந்த நரேந்திர மோடியை விட மிகப்பெரிய ஆம் ஆத்மி யாரும் இருக்க முடியாது.
வாரணாசியில் மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெறுவார். மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்'' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications