கடும் உரைக்கு பின் கட்டிப்பிடித்த ராகுல் காந்தி.. கைகொடுத்த மோடி.. அவையில் பரபரப்பு!
லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவரது இருக்கையில் சென்று கட்டியணைத்தார்.
டெல்லி: லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவரது இருக்கையில் சென்று கட்டியணைத்தார்.
தற்போது மிகவும் விறுவிறுப்பாக லோக் சபா கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டம் இன்று மாலை வரை நடக்கும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரி விமர்சனம் செய்தார். அவரது பேச்சு அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எத்தனை கொலை
அதில், இந்தியா முழுக்க கொலை கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சியில் நாடு மோசமான நிலையை எட்டிவிட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது.தொடர்ந்து பாஜகவினர் குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமைதியோ அமைதி
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மோடி அமைதியாக இருக்கிறார். மோடியும், அமித் ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள். கட்சி அதிகாரம் எல்லாம் அவர்களிடம்தான் இருக்கிறது. அவர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் ஜனநாயகம் இல்லை.

சிறுபான்மையினர் மீது தாக்குதல்
நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகமாகி உள்ளது. நாளுக்கு நாள் சிறுபான்மையின மக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியா ஆபத்தான நிலையை அடைந்து இருக்கிறது என்றார். இந்த நிலையில் அவரது நேரம் முடிந்துவிட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

நன்றாக பேசுவதாக
இதையடுத்து, நான் நன்றாக பேசுவதாக பாஜகவினர் என்னிடம் கூறினார்கள் என்று ராகுல் உரையை முடித்தார். தனது உரையை முடித்தவுடன் மோடியை கட்டிப்பிடித்து சிரித்தார். நேரடியாக சென்று மோடியின் இருக்கையில் அவரை கட்டிப்பிடித்தார் ராகுல். மோடி இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் அவரிடம் கைகொடுத்தார்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications