இனி சாதி, மத அடிப்படையில் வீடு விற்கவோ, வாடைக்கு விடவோ கூடாது: மும்பை கார்பரேஷன்
மும்பை: மும்பையில் சாத, மத அடிப்படையில் வீடுகளை வாடகைக்கு விடுவதோ, விற்பனை செய்வதோ கூடாது என்று மும்பை முனிசிபல் கார்பரேஷன் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாத, மத அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றது, விற்பனை செய்யப்படுகிறது. முஸ்லீம்கள், அசைவ பிரியர்களுக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. பாலிவுட் முஸ்லீம் பிரபலங்களுக்கு கூட மும்பையில் வீடு கிடைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல.

இந்நிலையில் சாதி, மத, உணவு கட்டுப்பாட்டின் அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு விடுவது, விற்பனை செய்வது கூடாது என்று மும்பை முனிசிபல் கார்பரேஷன் வியாழ்க்கிழமை தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்மானத்தை மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கவுன்சிலர் சந்தீப் தேஷன்பாண்டே கொண்டு வந்தார். இதற்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. ஆனால் ஆளும் பாஜகவோ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம் செயல்வடிவம் பெறுவதும், பெறாமல் போவதும் மாநில அரசின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications