கஜூராஹோவில் இருந்து கிளம்பிய விமானத்தில் ஹைட்ராலிக் கசிவு இல்லை- ஏர் இந்தியா
டெல்லி: கஜூராஹோவிலிருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் கிளம்புவதற்கு முன்னர் அதில் ஹைட்ராலிக் லீக்கேஜ் இல்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது.
வாரணாசியில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா 405 ரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நேற்று மாலை 7:15 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் விமானத்தில் ஹைட்ராலிக் குறைபாடு ஏற்பட்டதாக விமானி தெரிவித்தார். இதனையடுத்து விமானத்தின் சக்கரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது இருப்பினும் பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றியபோது 5க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கிளம்பியபோது விமானத்தில் ஹைட்ராலிக் குறைபாடு இல்லை என்றும், விமானத்தில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும், பலத்த சத்தம் மட்டுமே ஏற்பட்டது என்றும் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டு உள்ள அறிக்கையில், "கஜூராஹோவில் இருந்து டெல்லி சென்ற விமானம் ஹைட்ராலிக் கசிவு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக சக்கரப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டது. ஆனால் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. 146 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எந்த ஒரு பயணியும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications