ஜல்லிக்கட்டு: மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை! தமிழகத்தின் கடைசி நம்பிக்கையும் வீண்
டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு தயாராக இல்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியிலுள்ள நமது வட்டாரங்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர தயார் இல்லை என்பது தெரியவருகிறது.

கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்து மத்திய அரசு அறிவிக்கைவிட்ட நிலையில் அது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. அதுகுறித்த வழக்கு விசாரமஐ நடந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், அவசர சட்டம் கொண்டு வந்து உச்சநீதிமன்றத்தை மீறி செயல்பட மத்திய அரசு விரும்பவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு வெளிவராது என தகவல் வந்துள்ள சூழலில் மத்திய அரசும் கைவிரித்துவிட்டதால், சட்டப்படி ஜல்லிக்கட்டை நடத்த முடியாத சூழலில் தமிழக மக்கள் உள்ளனர்.
ஜல்லிக்கட்டு விசாரணையின்போது, பாரம்பரிய பழக்கம் என்பதற்காக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர மத்திய அரசு சார்பில் வாதம் முன் வைத்தது. குழந்தை திருமணமும் பாரம்பரிய வழக்கமாக இருந்ததுதான், அதற்காக அதையும் அனுமதிக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
எனவே நீதிபதிகளின் கருத்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருப்பதாக கருதும் மத்திய அரசு, இதில் அவசர சட்டம் இயற்றி கண்டனம் பெற விரும்பவில்லை என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications