ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ரத்து செய்ய நிதி ஆயோக் அதிரடி பரிந்துரை
டெல்லி: ரயில்வே துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று நிதி ஆயோக் குழு பரிந்துரைத்துள்ளது.
பொதுவாக மத்திய அரசின் பட்ஜெட் 2 பாகங்களாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. முதலில் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டும், அதன்பின் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1924-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது. தற்போது தனி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை ரத்து செய்ய நிதி ஆயோக் குழு பரிந்துரைத்துள்ளது.

நிதி ஆயோக் குழு உறுப்பினர் பிபெக் டெப்ராய் தலைமையிலான குழு பிரதமர் மோடிக்கு அளித்துள்ள 20 பக்க பரிந்துரையில் தனி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் எந்த பயனும் இல்லை; அதை ரத்து செய்துவிட்டு அதை பொதுபட்ஜெட்டுடன் இணைக்க வேண்டும். அப்படி இணைக்கும்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
தற்போது இக்குழுவின் பரிந்துரை குறித்து கருத்து தெரிவிக்குமாறு ரயில்வே அமைச்சகத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டின் இந்தியாவின் கடைசி ரயில்வே பட்ஜெட்டாக இருக்கும்.
இது குறித்து கருத்து தெரிவித்த ரயில்வே வாரியத்தின் தலைவர் ஏ.கே. மிட்டல், இதேபோல ஏற்கனவே பல குழுக்கள் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தேவையில்லை என்று பரிந்துரைத்துள்ளன. ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பாதுகாப்பு துறையை விட ரயில்வே துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படலாம். ஆனாலும் இதற்கு சில முக்கியத்துவங்கள் உள்ளன.
தனியாக இதற்கு பட்ஜெட் இருப்பது தான் சிறப்பாக இருக்கும். இந்த விஷயத்தில் ஒரு நாள் இரவிலேயே எல்லா முடிவையும் எடுத்துவிட முடியாது. நீண்ட ஆய்வு செய்து தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications