எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட உள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் யார்? மம்தா பானர்ஜி பதில்
டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. சோனியா காந்தி அழைப்பின் பேரில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் மன்மோகன் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாயாவதி, சீதாராம் யெச்சூரி, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் வேட்பாளர் பற்றி ஆலோசிக்கவில்லை என்று தெரிவித்தார். பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து மக்களை அவதிக்குள்ளாக்கிய பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர் என்று மம்தா கூறினார்.
குடியரசு தலைவர் தேர்தலில் யாரை நிறுத்துவது குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று அவர் தெரிவித்தார். கூடிய விரைவில் கூட்டு அறிக்கையை எதிர்க்கட்சிகள் வெளியிடுவோம் என்றார் அவர்.
இதனிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications