இந்தியாவின் நிலையை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை இல்லை... பாகிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ் கண்டிப்பு
டெல்லி : இந்தியா சொல்வதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தியா சொல்வதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இங்கு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாளையும் (23, 24-08-2015) நாளை மறுதினமும் இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் விதமாகவே உள்ளன.
பேச்சுவார்த்தைக்காக இந்தியா வரும் சர்தாஜ் அசிஸ், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களையும் சந்தித்து பேசுவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சர்தாஜ் அஜிஸ், காஷ்மீர் விவகாரத்தை விலக்கிவிட்டு இந்தியாவுடன் பேச ஏதுமில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் எந்தவித முன்நிபந்தனைகள் இன்றி இந்தியாவுக்கு புறப்படப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை தவிர பாகிஸ்தானுடன் வேறு எதைப்பற்றியும் பேச முடியாது என உறுதிபட கூறினார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியா வரும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஹூரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. இந்த சந்திப்பின்போது பயங்கரவாதம் பற்றி பேசுவதற்கு மட்டுமே முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியா சொல்வதை ஏற்றுக்கொண்டால் சர்தாஜ் அஜிஸ் இங்கு வரவேண்டும் என்று கூறிய சுஷ்மா, இந்தியாவின் நிலையை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications