இந்தியாவின் நிலையை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை இல்லை... பாகிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ் கண்டிப்பு
டெல்லி : இந்தியா சொல்வதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தியா சொல்வதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இங்கு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாளையும் (23, 24-08-2015) நாளை மறுதினமும் இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் விதமாகவே உள்ளன.
பேச்சுவார்த்தைக்காக இந்தியா வரும் சர்தாஜ் அசிஸ், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களையும் சந்தித்து பேசுவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சர்தாஜ் அஜிஸ், காஷ்மீர் விவகாரத்தை விலக்கிவிட்டு இந்தியாவுடன் பேச ஏதுமில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் எந்தவித முன்நிபந்தனைகள் இன்றி இந்தியாவுக்கு புறப்படப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை தவிர பாகிஸ்தானுடன் வேறு எதைப்பற்றியும் பேச முடியாது என உறுதிபட கூறினார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியா வரும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஹூரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. இந்த சந்திப்பின்போது பயங்கரவாதம் பற்றி பேசுவதற்கு மட்டுமே முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியா சொல்வதை ஏற்றுக்கொண்டால் சர்தாஜ் அஜிஸ் இங்கு வரவேண்டும் என்று கூறிய சுஷ்மா, இந்தியாவின் நிலையை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications