ஜெயலலிதாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்ற ஆட்சேபனை இல்லை: கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ்
பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்ற கர்நாடக அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று அம்மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் சிறைக்கு சென்று நேற்றுடன் 17 நாட்கள் ஆகின்றன.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மனு வருகிற 17-ந் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள்..
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்ப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். கர்நாடக அரசு இதற்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது.

சட்டம்- ஒழுங்கு அச்சம்
மேலும் இதனால் ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமோ என்றும் கர்நாடகம் அஞ்சுகிறது.

ஆட்சேபனை இல்லை
இந்த நிலையில் ஜெயலலிதாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்றுவதில் கர்நாடக அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

முறைப்படி கடிதம்
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஜெயலலிதாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்றுவதில் கர்நாடக அரசுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் சிறைத்துறை முறைப்படி கடிதம் வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற அனுமதி தேவை
இதற்கான உரிய அனுமதியையும் பெற வேண்டும். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகத்தில் நடைபெற்றது. அதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி பெற வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications