ராகுல் காந்தி என்ன பேசுகிறார் என்பது யாருக்குமே புரியலையே...: நரேந்திர மோடி
உதய்பூர்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானில் என்ன பேசினார்? யாருக்காக பேசினார்? என்பது காங்கிரஸ் கட்சியினர் உட்பட யாருக்குமே புரியவில்லை என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலஉதய்பூரில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக இங்கு பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக பழங்குடி இனமக்கள் இங்கு தீரமுடன் போராடினர்.

அந்த பழங்குடி இனமக்களின் தேசபக்தி இன்றும் நமக்கு உத்வேகம் தரக்கூடியதாக இருக்கிறது. உதய்பூர் பிரசார கூட்டத்துக்கு என்னை அழைத்த வசுந்தரராஜே சிந்தியாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் காந்தி என்ன பேசுகிறார்? எதற்காக பேசுகிறார்? யாருக்காக பேசுகிறார்? என்பது காங்கிரஸ் கட்சியினருக்குக் கூட புரியவில்லை... முசாபர்நகரில் இஸ்லாமிய இளைஞர்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று கூறினார் ராகுல். அவர்களது பெயரை கண்டிப்பாக ராகுல் காந்தி வெளியிட வேண்டும்.
ராகுலுக்கே இங்கே உள்ள அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை இல்லை..
அதனால்தான் யாருக்கும் சொல்லாமல் கோபால்கர் வந்து சென்றார்... ராஜஸ்தானில் ஆளும் கெலாட் அரசு மீது மனித உரிமைகள் ஆணையத்துக்கு நம்பிக்கை இல்லை.. சிறுபான்மையினர் ஆணையத்துக்கும் நம்பிக்கை இல்லை.. யாருக்குமே ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை இல்லை.
அத்துடன் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் தைரியமாக எந்த ஒரு அமைச்சரையும் சந்தித்துவிட முடிகிறதா? காங்கிரஸ் கட்சி 100 நாட்களில் விலையைக் குறைப்போம் என்றது. ஆனால் என்ன நடந்தது?
வெங்காய விளைச்சல் 5% குறைந்தது என்றால் விலையோ 1500 மடங்கு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில்தான் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
நாங்கள் ஏதேனும் புகார் தெரிவித்தால் உடனே சிபிஐயை அமைப்பை ஏவிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரராஜே சிந்தியா வெற்றி பெற்று முதல்வராவது உறுதி என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
புழுதி புயலில் சிக்கிய ராஜஸ்தான்.. வீடுகளை மூடியதால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவிப்பு.. வீடியோ பாருங்க -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications