இந்திய வரலாற்றில் வாஜ்பாயை போல் வேறொருவரை கற்பனை செய்து பார்க்க முடியாது.: அத்வானி
அகமதாபாத்: நாட்டின் பிரதமராக மோடி சிறப்பாக பணியாற்றினாலும் இந்திய வரலாற்றில் வாஜ்பாயை போல சிறந்த பிரதமர் யாரும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானி குஜராத்தின் அகமதாபாத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
மோடிக்கு பாராட்டு
நரேந்திர மோடி பிரதமாராக பதவியில் சிறப்பாக செயல்படுகிறார். பிரதமருக்கான பொறுப்பை உணர்ந்து மோடி உழைக்கிறார். இதனால் உலகளவில் மக்களின் புகழைப் பெற்றுள்ளார்.
வெளியுறவு முக்கியம்
பிரதமர் நாட்டை திறம்பட ஆட்சி செய்தால் மட்டும் போதாது. மேலும், மற்ற நாடுகளோடு உறவுகளை உருவாக்குவது மிகவும் அவசியம். தேர்தலில் மக்களின் மனதை வென்றார்.
தயக்கம் இருந்தது..
தற்போது உலக அளவில் மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளார். மோடி பிரதமராக வெற்றி பெற்றதும் என்ன நிகழப்போகிறது. மற்றவர்களுடன் எப்படி தொடர்பு வைத்துக்கொள்வார் என்று யோசனை இருந்தது.
மகிழ்ச்சியாக இருக்கிறேன்
ஆனால், அவர் திறமையாக செயல்படுகிறார். அவர் மட்டுமல்ல.. மற்றவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து வேலை செய்கிறார்கள். நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.
வாஜ்பாய்தான் பெஸ்ட்
இந்திய வரலாற்றில் வாஜ்பாயை போல் சிறந்த பிரதமர் யாரும் இல்லை. வாஜ்பாயை போல் வேறொருவரை கற்பனை செய்து பார்க்க முடியாது.
இவ்வாறு அத்வானி பேசினார்.