தாஜ்மகாலுக்கு இந்த கதியா? - காதல் சின்னத்தின் பரிதாப நிலையை பாருங்கள்
தாஜ்மகாலைப் பராமரிக்க எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
டெல்லி : தாஜ்மகாலைப் பராமரிக்க எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை என்று மத்திய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் தாஜ்மகாலின் நிலை
குறித்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
17ம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரால் கட்டப்பட்ட தாஜ்மகால், காதலின் சின்னமாகப் போற்றப்பட்டு வருகிறது. உத்திர பிரதேச மாநிலம் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மகாலைப் பார்வையிட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் உலகம் முழுவதிலும் இருந்து வருகிறார்கள். உ.பி.,யின் சுற்றுலா வருவாயில் கணிசமான பங்கு தாஜ்மகால் அளிப்பதே.

கடந்த சில நாட்களாகவே தாஜ்மகால் பற்றிய செய்தி தான் தேசிய அளவில் பேசு பொருளாக உள்ளது. உத்திர பிரதேச அரசால் வெளியிடப்பட்ட சுற்றுலா கையேட்டில்
தாஜ்மகால் பற்றிய தகவல்கள் நீக்கப்பட்டு இருந்தது தான் முதல் செய்தி. அதை முக்கிய எதிர்க்கட்சிகள் கண்டித்தனர்.
இது குறித்து கேள்வி ஒன்றில், தாஜ்மகால் இந்திய வரலாற்றிற்கு ஏற்பட்ட கறை என்றார் பா.ஜ.க பிரமுகர் ஒருவர்; முகலாய அரசர்கள் துரோகிகள் அவர்கள் கட்டிய நினைவுச்சின்னம் எதற்கு என்கிறார் பா.ஜ.க எம்.பி; ஆக்ராவில் இருந்த இந்துக்கோவிலை இடித்தே தாஜ்மகால் கட்டி இருக்கிறார்கள் என்கிறார் உ.பி சட்டமன்ற உறுப்பினர் இப்படியாக தாஜ்மகாலைக் குறிவைத்து கடந்த சில நாட்களாகத் தாக்குதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று மத்திய சுற்றுலாத் துறைச் செயலர் வெளியிட்ட அறிக்கையில், தாஜ்மகால் உள்ளிட்ட நாட்டின் பாரம்பரிய புராதான
கட்டிடங்களைப் பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் குதுப்மினார், ஜந்தர் மந்தர், சூரிய நாராயண கோவில் உட்பட 14
இடங்களைப் பராமரிக்க 7 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
தாஜ்மகாலைப் பாரமரிக்க எந்த ஒரு தனியார் நிறுவனமும் முன்வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆக்ராவைச் சுற்றி இருக்கும்
தொழிற்சாலைகளினால் தாஜ்மகாலின் தூய்மையான வெண்மை நிறம் மங்கிப்போய் இருக்கிறது.
முறையான பராமரிப்புப் பணிகள் இல்லையென்றால் தாஜ்மகால் என்ன ஆகுமோ என்கிற அச்சம் தாஜ்மகால் காதலர்களிடையே தற்போது எழுந்துள்ளது. அரசு இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications