மத்திய அரசின் சட்டம் சிறுபான்மையினரின் குடியுரிமையை நிச்சயம் பறிக்காது: அமித்ஷா திட்டவட்டம்
ராஞ்சி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தமானது சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிக்காது என உள்துறை அமைச்சர்ர் அமித்ஷா திடவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தில் இன்று அமித்ஷா பேசியதாவது:
பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு நேரு - லியாகத் ஒப்பந்தம் போடப்பட்டது. 70 ஆண்டுகளாக இது நிறைவேற்றப்படவில்லை. ஏனெனில் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் நடைமுறைப்படுத்தவில்லை.

தற்போது மத்திய அரசு லட்சக்கணக்கான கோடிக்கணக்கான அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. அத்தனை எதிர்க்கட்சிகளுமே தேசத்தை தவறாக வழிநடத்துகின்றன.
இந்த தேசத்தின் எந்த ஒரு சிறுபான்மை சமூகத்தின் குடிமகனுடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியான ஒரு சரத்தே குடியுரிமஇ சட்ட திருத்த மசோதாவில் இல்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications