வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெஜாரிட்டி ஆட்சி அமையாது: ப.சிதம்பரம் கருத்து
டெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமையாது எனத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான தனது கருத்துக்களைத் தெரிவித்தார். அதில், 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மெஜாரிட்டி பலத்துடன் கூடிய ஆட்சி இந்தியாவில் அமையாது என்றும், அப்படி ஏற்பட்டால் அது இந்திய ஜனநாயகத்தின் பலவீனமான திருப்பமாக அமையும் என அவர் கூறினார்.

மேலும், இது குறித்து அவர் தெரிவித்ததாவது :-
நாடாளுமன்ற தேர்தலுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தேர்தலில் மெஜாரிட்டி பலத்துடன் கூடிய ஆட்சி அமையும் என்பதில் எனக்கு உறுதியில்லை.
இந்திய ஜனநாயகம் தன்னை கடைந்தெடுக்கும் அத்தியாயத்திற்குள் காலடி எடுத்து வைக்க உள்ளதாக நான் கருதுகிறேன். கடந்த 60 ஆண்டு காலத்தில் இது இந்தியாவின் பலவீனமான திருப்பமாக அமையும் என கருதுகிறேன். ஆனால் இதனையும் நாம் கடந்து செல்ல வேண்டும்" என இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications