சுனந்தா புஷ்கர் தற்கொலைதான் செய்து கொண்டார்.. டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டுதான் மரணம் அடைந்தார், அவரது மரணத்தில் யாரும் குற்றவாளிகள் கிடையாது என்று என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டுதான் மரணம் அடைந்தார், அவரது மரணத்தில் யாரும் குற்றவாளிகள் கிடையாது என்று என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்றும், விஷத்தால் நிகழ்ந்தது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய டெல்லி போலீஸார், சசி தரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான ஒரு வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிஸ்டானி மற்றும் சந்தர் சேகர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் டெல்லி போலீஸ் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ராகுல் மெர்ஹா, தாக்கல் செய்த அறிக்கையில் சுனந்தாவின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இதனிடையே தன்னையும் இந்த வழக்கில் வாதியாக இணைக்க வேண்டும் என்று சுனந்தாவின் மகன் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது வழக்கில் புதிய திருப்பமாக சுனந்தா புஷ்கர் மர்ம மரண பற்றி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசி தரூர் பெயரும் குற்றப்பத்திரிகையில் உள்ளது. டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறியுள்ளனர். 4 வருட விசாரணைக்குப் பின் சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு தற்கொலைதான் காரணம் என்று கூறியுள்ளனர். இந்த மரண வழக்கில் குற்றவாளிகள் என்று யாரையும் குறிப்பிட முடியாது என்றும் கூறியுள்ளனர். மருத்துவ அறிக்கையின் படி இது தற்கொலைதான் என்று அவர்கள் முடிவிற்கு வந்துள்ளனர்.
ஆனால் இந்த குற்றப்பத்திரிக்கையின் இரண்டாம் பக்கத்திற்கு பின்புதான் சசிதரூர் பெயர் இடம்பெற்று இருக்கிறது. அவருக்கு இந்த மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், சசிதரூர் சுனந்தா புஷ்கரை கொடுமைப்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சசி தரூரால் சுனந்தா புஷ்கர் அதிக மன உளைச்சலுக்கு ஆளானதற்கான ஆதாரம் இருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications