அடுக்குமாடி குடியிருப்பில் நைட்டி,லுங்கி அணிந்து வெளியேற தடை! நொய்டாவில் நடந்த ட்விஸ்ட்! என்னாச்சு?
நொய்டா: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது லுங்கி, நைட்டி உள்ளிட்ட ஆடைகளை அணியக்கூடாது என அறிவுறுத்திய நிலையில் தற்போது அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் நொய்டா அமைந்துள்ளது. இது டெல்லிக்கு மிகவும் அருகே உள்ள பகுதியாகும். நொய்டா என்பது முக்கிய நகராக உள்ளது. இதனால் ஏராளமான மக்கள் அங்கு குடியேறி வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் புதிது புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் அங்கு ஹிம்சாகர் எனும் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் எப்போதும் குடியிருப்பு வளாகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளுக்கு தாங்கள் விரும்பிய உடைகளை அணிந்து சென்று வந்தனர்.

இதற்கிடையே தான் கடந்த 10ம் தேதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அங்கு வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் ஒன்று வழங்கப்பட்டு இருந்தது. அந்த நோட்டீசில் ‛‛குடியிருப்பு வளாகத்திற்குள் உள்ள பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது தாங்கள் அணியும் உடையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதனால் லுங்கிகள் மற்றும் நைட்டிகள் அணிந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். எப்போதும் உங்களின் நடத்தை, உடையில் சிறப்பு கவனம் தேவை. ஆட்சேபிக்கும் வகையில் யாரும் நடக்க கூடாது. இதனால் வீட்டுக்குள் பயன்படுத்த வேண்டிய லுங்கி, நைட்டி உள்ளிட்டவற்றை வெளியே அணிந்து வர வேண்டாம்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீஸ் என்பது விவாதத்தை கிளப்பியது. மேலும் இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. பல்வேறு தரப்பினர் எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் கூட இந்த முடிவின் பின்னணி பற்றி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கல்ரா விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:
‛‛இது ஒரு நல்ல முடிவாக இருக்கும். ஏனென்றால் பெண்கள் நைட்டி அணிந்து திரிந்தால், அது ஆண்களுக்கு சங்கடமாக இருக்கும். ஆண்கள் லுங்கி அணிந்தால் பெண்களுக்கும் அசவுகரியமாக இருக்கும். இதனால் ஒருவரையொருவர் மதித்து இந்த ஆடைக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். இதுபற்றிய புகாரால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இருப்பினும் கூட குடியிருப்பில் வசிப்போர் இந்த நோட்டீசுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து இந்த முடிவானது 4 நாட்களுக்கு பிறகு நேற்று திரும்ப பெறப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications