For Daily Alerts
Just In
மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.38.50 உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
டெல்லி: மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசின் புதிய முடிவின்படி வீட்டு உபயோகத்துக்காக 12 காஸ் சிலிண்டர்கள் வரை மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்களுக்கு சந்தை விலை கொடுத்தாக வேண்டும்.
அதனடிப்படையில் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.38.50 உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.529 க்கு தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.538.50க்கு விற்பனை செய்யப்படும்.
Comments
English summary
non-subsidised cooking gas (LPG) cylinders were on Monday hiked by Rs 38.50.