தென் மாநிலங்களில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகரிப்பு- தென்னிந்தியர் வடக்கே குடியேறுவது குறைகிறது
தென் மாநிலங்களில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இந்திய மொழிகளிலேயே இந்தி தான் அதிகம் பேசப்படுகிறது- வீடியோ
டெல்லி: தென்னிந்தியாவில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வட இந்தியாவில் தென்னிந்தியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தும் வருகிறது என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிப்பது:
- தமிழர்களும் மலையாளிகளும் கர்நாடகாவுக்கு கணிசமான அளவு இடம்பெயர்ந்துள்ளனர்.
- தென்னிந்தியர்கள் ஒருகாலத்தில் மகாராஷ்டிராவுக்கு முன்னர் இடம்பெயர்ந்தனர். குறிப்பாக மும்பைக்கு சென்றனர். ஆனால் தற்போது கர்நாடகாவுக்கு அதிகம் செல்கின்றனர்.

- உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவுக்கு இடம்பெயரும் மலையாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குர்கானில் தமிழர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
- டெல்லியில் குடியேறும் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
- தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இந்தி மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறி உள்ளனர்.
- தென்னிந்தியாவில் நேபாளிகளின் குடியேற்றமும் அதிகரித்துள்ளது.
- வட மாநிலங்களில் தமிழர்கள் குடியேறுவது 2001-ல் 8.2 லட்சமாக இருந்தது. இது 2011-ல் 7.8 லட்சம்.
- வடக்கே மலையாளிகள் குடியேறுவது 2001-ல் 8 லட்சமாக இருந்தது 7.2 லட்சம் என குறைந்திருக்கிறது.
- தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர் எண்ணிக்கை 77.5 லட்சமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications