கட்டி பிடிப்பது, கண் அடிப்பது, கதையடிப்பது சரியில்லை.. ராகுல் காந்தியை கண்டித்த சபாநாயகர் சுமித்ரா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தனது உரைக்கு பின் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: லோக்சபாவின் உள்ளே கண் அடிப்பது, கட்டிபிடிப்பது சரியில்லை என்று ராகுல் காந்தியின் செயல்பாடுகளுக்கு தனது அதிருப்தியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வெளிப்படுத்தியுள்ளார்.

    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் மோடியையும், அரசையும் கடுமையாக விமர்சித்தார். அவற்றை சிரித்தபடியே கடந்தார் மோடி.

    Not opposed to hug, but decorum of the House must be maintained, says speaker

    உரையை முடித்த பிறகு, நான் அன்பை மட்டுமே வலியுறுத்துகிறேன், வெறுப்பை கிடையாது என கூறியபடி, பிரதமர் நரேந்திர மோடி இருக்கைக்கே சென்று அவரை கட்டியணைத்தார் ராகுல் காந்தி.

    பின்னர் தனது இருக்கைக்கு வந்த ராகுல் காந்தி, அருகேயிருந்த உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருந்ததோடு, கண்ணடித்தார். கேரள நடிகை பிரியா வாரியரை போல ராகுல் கண்ணடித்ததாக, சமூக வலைத்தளங்களில் கேலி ஆரம்பித்துள்ளது.

    இந்த நிலையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையில் கூறுகையில், நான் யாரையும், யாரும் கட்டி பிடிக்க கூடாது என கூற விரும்பவில்லை. நானும் ஒரு தாய்தான். ஆனால், நடந்து கொண்ட விதம்தான் சரியில்லை. இருக்கைக்கு வந்து உட்கார்ந்த பிறகு கண் அடிப்பது, பேசிக்கொண்டிருப்பது சரியில்லை. அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தியை மென்மையாக கண்டித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+