ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு - நாளை முதல் அமல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் முறையை மத்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது.

ரயில் புறப்படுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்புவரை இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியை நாளை முதல் ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கான இறுதி பட்டியல் தற்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் வெளியிடப்படகிறது. இந்த நடைமுறையை ரயில்வே துறை தற்போது மாற்றியமைத்துள்ளது.

Now Book Tickets 30 Minutes Prior to Departure of Train

இதன்படி ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னதாக முதல் பட்டியலும், அரைமணி நேரத்திற்கு முன் இறுதி பட்டியலும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் புறப்படும் அரைமணி நேரத்திற்கு முன் வரை டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் மட்டுமின்றி டிக்கெட் கவுண்டரிலும் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த முறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்காக முன்பதிவு பட்டியல் தயாரிக்கும் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் ஒன்று, 30 நிமிடங்களுக்கு முன் 2 என மொத்தம் 3 முறை முன்பதிவு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. இதனால் முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+