பாகிஸ்தானை புகழ்ந்ததற்காக ரம்யா மீது தேச துரோக வழக்கு.. கோர்ட்டில் வக்கீல் மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பாகிஸ்தானை புகழ்ந்த நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய கோரி பெங்களூரில் கோர்ட்டில் வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தான் நல்ல நாடுதான், நரகம் இல்லை என்று என்று காங்கிரஸ் எம்.பியாக இருந்த நடிகை ரம்யா கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் நிலையில், ரம்யா இவ்வாறு பேசியது முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

இந்நிலையில், பெங்களூர் பெங்களூர் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கறிஞர் விட்டல் கவுடா என்பவர் இதுதொடர்பாக ரம்யாவுக்கு எதிராக தேச துரோக மனு தாக்கல் செய்துள்ளார்.

Now Congress MP Ramya faces the sedition heat

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 200ன்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரம்யா மீது போலீசார், தேச விரோத வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று விட்டல் கவுடா தனது மனுவில், கோரியுள்ளார்.

Now Congress MP Ramya faces the sedition heat

இதனிடையே, டிவிட்டரில் ரம்யா பதிலடி கொடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பாகிஸ்தானை நமது சகோதர நாடு என கூறியிருந்ததை அவர் ஷேர் செய்துள்ளார். மோடி பாகிஸ்தான் விசிட் சென்றதையும் ரம்யா குறிப்பிட்டுள்ளார். இது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் ரம்யா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+