தர ஆய்வில் மேகி நூடுல்ஸை அடுத்து உடைந்த டெட்டால் சோப்பின் குட்டு
ஆக்ரா: மேகி நூடுல்ஸை அடுத்து டெட்டால் குளியல் சோப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் மேகி நூடுல்ஸுக்கு உணவு பாதுக்காப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது.

இந்நிலையில் ரெக்கிட் பென்கிசர்(இந்தியா) நிறுவன தயாரிப்பான டெட்டால் குளியல் சோப்பு மற்றும் 10 மருந்துகளின் தரத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சோதனை செய்தது. அதில் டெட்டால் சோப்பு மற்றும் 10 மருந்துகளின் தரம் சரியில்லை என தெரிய வந்துள்ளது.
டெட்டால், டிங்க்ச்சர் மற்றும் 9 மருந்துகளின் மாதிரிகளை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேகரித்து அதை ஆய்வுக்காக லக்னோவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது. அந்த ஆய்வில் தான் டெட்டால் சோப்பின் தரம் பற்றி தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஆக்ரா மருந்து இன்ஸ்பெக்டர் ஆர்.சி. யாதவ் கூறுகையில்,
நாங்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட டெட்டால் சோப்பின் கவரில் 125 கிராம் என எடையை குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் ஆய்வில் அதன் எடை 117.0470 கிராம் என்பது தெரிய வந்தது. அந்த சோப்பு உரிமம் இல்லாமல் கடையை நடத்தி வந்த சந்தோஷ் குமார் வால்மிகியிடம் இருந்து வாங்கப்பட்டது.
ஆய்வில் சோப்பின் தரம் மிகவும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications