ஏப்ரல் 1-ந்தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்வு- இனி ரூ.10..

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் இரு மடங்காக ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயருகிறது.

திருவிழா மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் பிளாட்பாரம் என்னும் நடைமேடைக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நபர் ஒருவருக்கு ரூ.5 ஆக உள்ள நடைமேடை கட்டணம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.10 ஆக உயர்த்தப்படும்; ரூ10க்கு மேல் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Now railway platform ticket to cost Rs 10

கடந்த 2012ஆம் ஆண்டு வரை பிளாட்பாரம் டிக்கெட் ரூ3 ஆக இருந்தது. 2012ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதிதான் பிளாட்பாரம் டிக்கெட்டை ரூ5 ஆக உயர்த்தினார். தற்போது இந்த கட்டணமும் இரு மடங்காக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் ப்ளாட்பாரம் கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+