தெலுங்கானாவில் சாலை விபத்து... என்.டி.ஆரின் பேரன் பலி!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஆந்திர முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ஆரின் பேரன் ஜானகிராமன் பலியானார்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமராவின் மகன் நந்தாமுரி ஹரிகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேச கட்சி தலைவர்களி்ல் ஒருவராக உள்ளார். இவரது மகன் ஜானகிராமன். இவர் என்.டி.ஆர்.ஆர்ட்ஸ் என்ற பெயரில் சினிமா படங்களை தயாரித்து வந்தார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடாவிற்கு பயணம் செய்து கொண்டிருந்த ஜானகிராமனின் கார் மீது, டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக மோதிய்து. இந்த விபத்து தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நலகொண்டா மாவட்டம் அகுபமலா என்ற கிராமம் அருகே நடந்தது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஜானகிராமன் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட ஜானகிராமன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மறைந்த ஜானகிராமன் உடலுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செய்து வருகின்றனர். அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications