பரோடாவில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒபாமா தம்பதிகள்
இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஜனவரி 26-ம் தேதி பரோடாவில் நடக்கும் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தன் மனைவியும் மிச்செலுடன் டெல்லிக்கு வருகிறார்.

அவருக்காக விசேஷ பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
26- ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாட்டங்களில் பங்கேற்று முடித்ததும், அடுத்த நாள் பரோடாவில் நடக்கும் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் ஒபாமாவும் அவர் மனைவியும்.
இதுகுறித்து ஏஆர் ரஹ்மான் கூறுகையில், "பரோடாவில் நடக்கும் எனது இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வரும் ஒபாமா தம்பதிகளை வரவேற்கிறேன்," என்றார்.
ரஹ்மானுக்கு ஏற்கெனவே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் அனுப்பியிருந்தனர் ஒபாமா தம்பதிகள். அதற்காக ரஹ்மான் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications