இணையதளத்தில் ஆபாசப்படம்... தானே காவல் நிலையத்தில் சன்னி லியோன் ஆஜர்!
இணைய தளத்தில் ஆபாசப் படங்கள் வெளியிட்டுள்ளதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து நடிகை சன்னி லியோன் தானே போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது அவரைப் பார்க்க பெரும் கூட்டம் திரண்டதால் தள்ளுமுள்ள ஏற்பட்டது.
பாலிவுட் சினிமா பத்திரிகை ஒன்றில் இடம் பெற்றுள்ள நடிகை சன்னி லியோன் படம் ஆபாசமாக இருப்பதாகவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பார்த்தால் அவரது மேலும் பல ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் உள்ளதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து ஜனஜக்ரிதி சமிதி என்ற அமைப்பின் பெண் உறுப்பினர் மும்பை டோம்ப்வில்லி போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார், 'தானே' போலீசின் சைபர்செல் பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய சமூகத்தையும் காலச்சாரத்தையும் அழிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தனது உறவினர்கள் மற்றும் வக்கீலுடன், 'தானே' சைபர்செல் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடிகை சன்னி லியோன் நேற்று மாலை ஆஜரானார்.
அங்கு அவர் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டி வந்தது. அவர் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்க்கத் திரண்டதால், அந்த காவல் நிலையத்தைச் சுற்றி பெருங்கூட்டம் கூடி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கூட்டத்தைக் கலைத்த போலீசார், பின்னர் சன்னி லியோனிடம் விளக்கம் பெற்றுக் கொண்டனர்.