ஒடிசாவில் டிவி நிருபர் கழுத்தை அறுத்துப் படுகொலை
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் டி.வி. நிருபர் ஒருவரின் கழுத்தை அறுத்து மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்ரம்பூர் கிராமத்தை சேர்ந்த தபஸ் ஆச்சார்யா என்ற அந்த நிருபர், கஜ்னம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டி.வி.சேனலில் பணியாற்றி வந்தார். வேலை முடிந்து நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை வழி மறித்த சிலர், அவரது கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் அறுத்து கொலை செய்துள்ளனர்.
கள்ளிக்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியின் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கிடந்த தபஸ் ஆச்சார்யாவின் உடலை மீட்ட போலீசார், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications