பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த ஆசிரியை தீ வைத்து எரிப்பு: பள்ளி ஆய்வாளர் தலைமறைவு
புவனேஸ்வர்: பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த ஆசிரியை தீ வைத்து எரிக்கப் பட்ட சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பள்ளி ஆய்வாளரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும் 27 வயது ஆசிரியை ஒருவருக்கு பள்ளி ஆய்வாளர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து ஆசிரியை அளித்த புகாருக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இரவு ஆசிரியையை புகாரை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டியுள்ளனர் குற்றவாளிகள். அதற்கு ஆசிரியை மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள் அவரை தீ வைத்து எரித்து விட்டனர்.
இதில், 90 சதவீத தீக்காயம் அடைந்த அந்த ஆசிரியை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப் பட்ட முக்கிய குற்றவாளியான பள்ளி ஆய்வாளர் தலைமறைவாகி விட்டதால், அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், புகாரை குறித்து நடவடிக்கை எடுக்காத உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட பள்ளி ஆய்வாளர், மாவட்டக் கல்வி ஆய்வாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications