பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை என்ன செய்ய போகிறது தெரியுமா ஆர்.பி.ஐ?
செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாற்றப் போவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
டெல்லி: திரும்பப்பெறப்படும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவை மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதையடுத்து புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு கொண்டு வரப்பட்டு மக்களிடம் இருந்து பழைய நோட்டுகளை பெற்று புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்களிடம் இருந்து பெறப்படும், செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி பழைய நோட்டுகள் புணரமைக்க முடியாத அளவுக்கு அழிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் திரும்பப்பெறப்படும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ட்ரக்குகளில் ஓரிடத்துக்கு கொண்டுவரப்படும்.
அவை துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஈர மூரட்டப்படும் என்றும் பின்னர் கட்டிகளாக மாற்றப்பட்டு அவை ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டிகள் ஒப்பந்தகாரர்களிடம் வழங்கப்பட்டு நிலத்தை நிரப்பும் பணிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரே கட்டமாக முடியாது என்றும் பல கட்டங்களாக இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இநதியாவில் கடந்த மார்ச் மாதம் மொத்தம் 15, 707 மில்லியன் 500 ரூபாய் நோட்டுகளும் 6,326 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications