காஷ்மீரில் 4 ஆண்டுகாலம் அமலில் இருந்த எஸ்.எம்.எஸ்.க்கான தடை அதிரடி நீக்கம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 ஆண்டுகாலமாக அமலில் இருந்த எஸ்.எம்.எஸ். மீதான தடை தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா முதல்வராக உள்ளார்.

அண்மையில் நடந்த தேர்தலில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தேசிய மாநாடு கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அத்தனை தொகுதிகளிலும் இரு கட்சிகளும் தோல்வி கண்டன.
கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லாவும் இந்த தேர்தலில் தோல்வியை தழுவ நேர்ந்தது. மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மாநிலத்தில் ப்ரீபெய்ட் செல்போன் வாடிக்கையாளர்கள் எஸ்.எம்.எஸ். தடையை நீக்கக் கோரி உமர் அப்துல்லாவுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து எஸ்.எம்.எஸ். தடை நீக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications