முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கு அனுமதி தர வேண்டும்... மோடியிடம் உம்மன்சாண்டி மீண்டும் வலியுறுத்தல்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேரளா முதல்வர் உம்மன்சாண்டி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.

இதனால் அணையின் சில மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. பின்னர் இது நிறுத்தப்பட்டது. தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மீண்டும் எந்த நேரத்திலும் நீர் திறக்கப்படலாம் என்பதால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கேரளா வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முதல்வர் உம்மன்சாண்டி சந்தித்து பேசினார். அப்போது முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று உம்மன்சாண்டி வலியுறுத்தினார். அத்துடன் தமிழக முதல்வருடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
கடந்த வாரம் டெல்லி சென்ற உம்மன்சாண்டி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications