‘அம்மா’வைச் சந்தித்து ஆசி பெற்றார் ‘பிரதமராகும்’ மோடி !
அகமதாபாத்: தேசிய அளவில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்று வரும் நிலையில், வாரணாசி மற்றும் வதோதரா என போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி. அதனைத் தொடர்ந்து இன்று தனது தாயைச் சந்தித்து ஆசி பெற்றார் மோடி.

கடந்த ஏப்ரம் 7ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. கருத்து கணிப்பு முடிவுகளை நிஜமாக்கும் வகையில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
Narendra Modi in conversation with his mother at her residence #Elections2014 pic.twitter.com/pc4ju4a2YN
— ANI (@ANI_news) May 16, 2014 வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, இரு தொகுதிகளிலுமே வெற்றியைப் பெற்றுள்ளார்.
முன்கூட்டியே வெற்றிக் கொண்டாட்டத்தை திட்டமிட்டுள்ள மோடி, மோடி இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தாயிடம் ஆசி...
வழக்கமாக தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு தனது தாயாரை சந்திப்பது மோடியின் வழக்கம். அதன்படி, இன்று முதல் வேலையாக காந்திநகரில் தங்கியிருக்கும் தமது தாயை சந்தித்து நரேந்திர மோடி ஆசி பெற்றார்.












Click it and Unblock the Notifications