காலை 3 மணிக்கு எழுப்பி, குளிக்க வைத்து, பிடித்த டிபன் கொடுத்து யாகூப் மேமனுக்கு தூக்கு!
மும்பை: மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புள்ள யாகூப் மேமனுக்கு, இம்மாதம் 30ம் தேதி, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக காலை 3 மணிக்கே, அவனை எழுப்பி, குளிப்பாட்டி தூக்கில் ஏற்ற உள்ளனர். முன்னதாக, பிடித்த காலை சிற்றுண்டி அவனுக்கு கொடுக்கப்பட உள்ளது.
1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பில், பல அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த வழக்கில், கடந்த சில வருடங்கள் முன்பு கைது செய்யப்பட்ட யாகூப் மேமனுக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
30ம் தேதி தூக்கு
கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் 30ம் தேதி காலை 4.30 மணிக்கு, யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தற்போது மேமன் அடைக்கப்பட்டுள்ள நாக்பூர் ஜெயிலில்தான் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தீவிரவாதி கசாப்பை தூக்கிலிட்ட ஊழியரே, மேமனையும் தூக்கிலிட உள்ளார்.

பிடித்த டிபன்
இதற்காக அதிகாலை 3 மணிக்கு யாகூப் மேமன் எழுப்பிவிடப்படுகிறான் (ஒருவேளை தூங்கினால்). அதன்பிறகு, அவனை குளிக்க கேட்டுக்கொள்வார்கள். குளித்து முடித்த பிறகு, புது வெள்ளை உடை கொடுக்கப்படும். எல்லா மரண தண்டனை குற்றவாளிகளை போலவே, மேமனுக்கும், பிடித்த டிபன் கொடுக்கப்படும்.

சூரிய உதயத்துக்கு முன்பு
அதிகாலை 4.15 மணிக்கு தூக்கு மேடைக்கு யாகூப் மேமன் கொண்டுவரப்படுகிறான். சரியாக காலை 4.30 மணிக்கு தூக்கில் தொங்கவிடப்படுகிறான். விதிமுறைப்படி, சூரிய உதயத்துக்கு முன்போ அல்லது பின்போதான் தூக்கு தண்டனை கைதியை தூக்கில் தொங்கவிட வேண்டும். அதன்படி மேமனுக்கு காலை சூரிய உதயத்துக்கு முன்பு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

7 அடி உயரம்
மேமன் 75 கிலோ எடை கொண்டவன். எனவே அவனுக்கு 7 அடி உயர தூக்கு மேடை/கம்பம் நிறுவப்படுகிறது. உடல் எடை அதிகமாக இருக்கும் கைதிகளுக்கு, தூக்கு கயிறு உயரம் குறைக்கப்படும். உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு தொங்கவிடும் உயரம் 9 அடிவரை செல்லும். அப்போதுதான், விரைவில் உயிர் பிரியும் என்பது இதற்கு காரணம்.

இறுதி சடங்கு
அதேநேரம், இறுதி சடங்கு எங்கு நடைபெறும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட சடலங்களை பொது இடங்களில் இறுதி சடங்கு செய்ய அனுமதிப்பதில்லை. சிறைக்குள்ளேயே இறுதி சடங்குகள் முடிவடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குடும்ப உறுப்பினர்கள், அதில் பங்கேற்பார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications