என்ட அம்மே.. அரசு அலுவலகங்களில் ஓணம் கொண்டாட தடை... கேரள அரசு அதிரடி உத்தரவு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி நேரத்தின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு அம்மாநில அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளான "திருவோணம்' பண்டிகைக்கான இந்த ஆண்டு கொண்டாட்டம் வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கேரள மக்கள் உற்சாகமாக செய்து வருகின்றனர். ஓணம் பண்டிகையின்போது, பல வண்ண மலர்களில், அத்தப்பூ என்ற 'பூக்கோலம்' போட்டு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர்.

பத்து நாட்கள் நடக்கும் இந்த பண்டிகையின்போது அரசு அலுவலகங்கள், வீடுகள், கோயில்கள் என அனைத்து இடங்களும் பூக்கோலங்களால் அலங்கரிக்கபடுவது வழக்கம்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி நேரத்தின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கேரள தலைமைச் செயலர் எஸ்.எம்.விஜய் ஆனந்த் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலக பணி நேரங்களில் ஓணம் உள்பட எந்தவொரு பண்டிகையையும் கொண்டாடக் கூடாது. அலுவலக பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக் கூடாது. அனைத்துத் துறைகளின் தலைவர்களும் அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications