குஜராத்தில்.. ஒரே நாளில் 5246 பேருக்கு கொரோனா.. 8 முக்கிய நகரங்களில் கேஸ்கள் தொடர்ந்து சரிவு
குஜராத்தில் 8 நகரங்களில் தொற்று குறைந்துள்ளது
அஹமதாபாத்: நேற்று ஒரே நாளில் குஜராத்தில் 5,246 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.. கடந்த 39 நாட்களில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்... டவ்தே புயல் காரணமாகவே, இந்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை முறையாக தகனம் செய்ய இடமில்லாமல் கங்கையில் வீசப்படும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் உள்ளன.

கொரோனா
இந்த நிலையில், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழப்போரின் உண்மையான எண்ணிக்கைகள் மறைக்கப்படுவதாக காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் சந்தேகத்தையும் கிளப்பி வருகின்றன.. தற்போது குஜராத்தின் எட்டு முக்கிய நகரங்களின் தொற்று எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.. கடந்த 209 நாளில் இந்த 8 நகரங்களில் வெறும் 49 சதவீத பாதிப்பு மட்டுமே பதிவாகி உள்ளது..

குறைவு
இங்கு 2 பேரில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர் மற்றும் காந்திநகர் போன்ற நகரங்களில் கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து தொற்று பாதிப்பு சரிந்து வருகிறது.

8 நகரங்கள்
இங்கு மொத்த பாதிப்பு 65 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக குறைந்து, அது மார்ச் 10-ம்தேதி வாக்கில் 49 சதவீதமாக முற்றிலும் குறைந்துள்ளது.. அந்த வகையில், குறிப்பிட்ட அந்த எட்டு நகரங்களில் 2,588 கேஸ்களே பதிவாகி வருகின்றன.

சூறாவளி
அதேசமயம், மாநிலம் முழுக்க தொற்று குறையவில்லை.. இதுவரை வந்த ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையை கொண்டு பார்க்கும்போது, தற்போது குறைந்துள்ளது.. இது டவ்தே சூறாவளியின் தாக்கமாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications