காஷ்மீரில் முழு அடைப்பு: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி- யாசின் மாலிக் கைது!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போலி என்கவுண்ட்டரில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இன்றைய போராட்டத்தின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இளைஞர் பலியானதால் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் திரால் என்ற இடத்தில் கடந்த 13-ந் தேதி பாதுகாப்பு படையினரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன.

இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் திரும்பிய ஹூரியத் தலைவர் கிலானிக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு பேரணியில் பாகிஸ்தான் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
இதனை நியாயப்படுத்தி பேட்டியளித்த பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டார். என்கவுண்ட்டர் மற்றும் ஆலம் கைதைக் கண்டித்து முழு அடைப்புக்கு ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர் கிலானி இன்று அழைப்பு விடுத்து இருந்தார். இதனிடையே கிலானியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த முழு அடைப்பின் போது பட்காம் மாவட்டம் நர்பல் பகுதியில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதலின்போது இளைஞர் ஒருவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு செல்ல ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் மற்றும் சமூக ஆர்வலர் ஸ்வாமி அக்னிவேஷ் ஆகியோர் முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு, உயிர் பலிகள், கைது நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீரில் கொந்தளிப்பான நிலை நீடித்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications