கெளரி லங்கேஷ் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளி கைது
இடதுசாரி சிந்தனையாளர் கெளரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

பெங்களூரு : இடதுசாரி சிந்தனையாளர் கெளரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மூத்த பெண் பத்திரிகையாளரும், தீவிர இடதுசாரி சிந்தனையாளருமான கெளரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

வலதுசாரி இயக்கங்களுக்கு எதிராக அவர் தொடர்ந்து எழுதி வந்ததே கொலைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஹிந்துத்வா செயற்பாட்டாளரும், சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு இருந்த நவீன் குமார் என்கிற நபர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கொலையில் முக்கியக் குற்றவாளியான பரசுராம் வாக்மோர் நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இது 6வது கைது.
கொலை நடந்து 9 மாதங்களாக தலைமறைவாக இருந்த பரசுராமை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், தனி இடத்தில் வைத்து விசாரணை நடந்துவருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications