கர்நாடகாவில் பரபரப்பு.. ஒரே வாரத்தில் மற்றுமொரு போலீஸ் டி.எஸ்.பி. தற்கொலை
பெங்களூர்: கடந்த 5 ஆம் தேதி சிக்மகளூர் டி.எஸ்.பி. தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், மங்களூரூ காவல் துறை துணை கண்காணிப்பாளர் எம்.கே.கணபதி நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரூ டி.எஸ்.பி. எம்.கே.கணபதி குடகு மாவட்டத்தில் மடிகேரி என்ற பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இடத்தில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட இடத்தி்ல் டி.எஸ்.பி. எழுதிய கடிதம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், கர்நாடகா அமைச்சர் ஒருவர் அவரது மகன் மற்றும் சிலரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிக்மகளூர் டி.எஸ்.பி. கலாப்பா ஹான்டிபாக் (34), கடந்த 5 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்
ஏற்கனவே
தற்போது இரண்டாவது டி.எஸ்.பி. எம்.கே.கணபதி தற்கொலை செய்துள்ளார். எனவே இரண்டு தற்கொலைக்கான பின்னணியில் அரசியல் பின்னணி இருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு போலீஸ் அதிகாரிகள் தற்கொலை சம்பவம் கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications