மே.வங்கம்: மேலும் ஒரு திரிணாமுல் எம்.எல்.ஏ. ராஜினாமா -24 மணிநேரத்தில் மமதாவுக்கு 4-வது 'ஷாக்'
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உத்தகர்கந்தி எம்.எல்.ஏ. பன்சாரி மெய்தியும் எம்.எல்.ஏ. பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுடன் மேற்கு வங்கமும் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்துவதில் பாஜக படுமுனைப்பாக உள்ளது. திரிணாமுல் எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி தொடங்கி வைத்த கலகக் குரல் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
கடந்த 24 மணிநேரமாக அடுத்தடுத்து திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் பதவி ராஜினாமா செய்வதும் கட்சியில் இருந்து வெளியேறுவதும் தொடருகிறது. சுவேந்து அதிகாரி, ஜிதேந்திர திவா, சிபந்தர தத்தா ஆகிய எம்.எல்.ஏக்களைத் தொடர்ந்து மற்றொரு எம்.எல்.ஏ. பன்சாரி மெய்தி இன்று இரவு ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பன்சாரி மெய்தி விலகியுள்ளார். 24 மணிநேரத்தில் ராஜினாமா செய்திருக்கும் 4-வது திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. பன்சாரி மெய்தி. திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா முன்னிலையில் நாளை பாஜகவில் ஐக்கியமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications