ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம்... பீகார் தேர்தலுக்குப் பின் அரசிதழில் வெளியாகும்: மனோகர் பரிக்கர்
டெல்லி: ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் போர்ராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 135-வது நாளை எட்டியுள்ளது.
ராணுவத்தில் ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை அமல்படுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து, கடந்த மாதம் 5-ந் தேதி ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், பீகார் தேர்தல் முடிந்ததும் அரசிதழில் இதனை வெளியிடுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால், மத்திய அரசு அறிவித்தத் திட்டத்தில் 7 குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதிகள் சுட்டிக் காட்டினர். அதை மத்திய அரசு ஏற்கவில்லை. அதனையடுத்து, முன்னாள் ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 135-வது நாளாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, முன்னாள் ராணுவ அதிகாரிகள் தங்கள் கோரிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் 200-க்கும் அதிகமான ராணுவ அதிகாரிகள் தங்களது ரத்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசிதழில் அறிவிப்பாக வெளிட தாமதம் ஆனது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல்கள் முடிந்த பின்னர் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
முடிந்தவரை தீபாவளிக்கு முன்னதாகவே அதனை நிறைவேற்ற முயற்சிப்பேன் எனவும் கூறினார்.
பீகாரில் ஐந்து கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. எனினும், அடுத்த மூன்று நாட்கள் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications